K - A - D - A - L, கடலா? காதலா?
>> Wednesday, February 13, 2013
‘அப்புறம், புலிய அங்க வச்சுப் பார்த்தேன்’
‘எங்கடே?’
‘கடல்’ கொட்டாயிலதாம்லே’
‘ஆமடே, பொளுதே போவல, சவமாயிட்டு திண்ணைல சாஞ்சுருக்கதுக்கு கொட்டாய்க்குப் போறது பெட்டராயிட்டு கேட்டியா?’
‘படம் எப்படி மக்கா?’
‘லே, சூப்பருல்லா! எங்க ஆச்சிய கொட்டாய்ல தரிசுச்சேம்ல! வேதக்கோயிலுல்ல என்னலா சொல்லுதான்? நீ விரியன் குட்டியா இல்ல, விசுவாசியா? அதையேதான் திருப்பி வாசிக்கானுவ. மன்னிக்குறதுக்கு மனசு மட்டும் போதாதுலே, ஒரு வீரம் வேணும் கேட்டியா?’
‘சண்டியர்ல கமலகாசன் சொல்றமாதிரியாடே?’
‘லே, இது வேறவே, படத்தப் பாரு, அப்புறம் சொல்லு, ஒனக்குப் புடிக்காட்டி காந்திமதிகிட்ட போய் தலய கொடுக்கேன்’
‘ஓந்தலய வச்சு நாங்க என்ன மயிரா புடுங்க? விசயத்துக்கு வால்லே. அந்த ஹீரோயினுப் பொண்ணு ‘தளுக் தளுக்’னு தளும்புறாளே, ஆஃப்பாயில் மஞ்சக்கரு கணக்கா!’
‘யேய், செத்த மூதி! என்னிக்காச்சும் ஆர்யாசுல பஃபே சாப்பிட்ருக்கியாலே?’
‘இல்லியே மக்கா’
‘ம்க்கும், வாயப் புடுங்காமா சொல்றதக் கேளுலே, ஒனக்கு ஐஸ்க்ரீம் புடிக்குந்தான?
‘என்னடே. அனந்தசயனம் ஸார்வாள்ட்டருந்து ரெண்டு பேரும் ஒன்னா படிக்கோம், பொறங்கைல வழிஞ்சாலும் நக்கித் திம்பேன்னு தெரியாதா ஒனக்கு?’
‘தாயளி, நீ நக்கலைனா நான் நக்கப் போறேன், அது இல்லடே விசயம். ஒரு கரண்டி வக்கிற கப்புல, ரெண்டு கரண்டி வச்சா திம்பியா மாட்டியாம்லே?’
‘நல்லா வளிச்சு திம்பேன்’
‘அதாம்லே தொளசி, ராதாக்கா மகளாக்கும்’
‘ஓ, இப்போ வெளங்கிட்டு மக்கா! அது சரி, பாட்டையா(Bharathi Mani) நடிச்சுருக்காராமே?’
‘ஆமாம்லே, அவரு சும்மா வந்து போனாலே கவருமெண்டு கொண்டு வந்து அவார்டா கொட்டுவாம்லே! இதுல எண்ணி பத்து வார்த்தை வேற பேசுதாரு, எளுதி வச்சுக்கோ, வார வருசத்துல அறுவடையே இந்தப் படத்துக்குதாம்லே!’
‘அப்போ கார்த்தி மவன்?’
‘லே, கோட்டியாம்ல புடிச்சுருக்கு ஒனக்கு? கார்த்திக்கு இப்பதாம்லே கல்யாணமாயி அவுரு அலெக்சு மாரி பொட்டி தொளைக்கிற படமா கொடுக்காரு..?!’
‘அவனில்லலே, எப்பவுமே பால் கட்டுன மாரி நெஞ்ச விம்மிக்கிட்டே வருவாருல்லா நடிகரு முத்துராமன், அவுரு மவன் கார்த்தி, கார்த்தி மவன்..’
‘அவனச் சொல்லுதியா! கெளதமு! ஹீரோவாக்கும். ஆளு வாட்டசாட்டமாய் இருக்கான். கொஞ்சம் நடிக்கவும் செய்யுதான், ஒரு மாரி கொள்ளாம் கேட்டியா’
‘அப்ப, கொட்டாய்க்குப் போய் இந்தப் படத்த பாக்கலாந்தானே?’
‘நல்லாடே, போய்ப் பாரு. ஆனா ஒரு விசயம் மக்கா! தாந்தேன்னு ஒருத்தனோட சிறுத்தய வாசல்ல கட்டி வச்சிருப்பாம்லே, அதுல ஏறி ஒக்காந்து படம் பாக்கப் போனே, தாயளி நீ தீந்தேம்ல. ஒளுங்கா கொட்டாய்ல போட்ருக்க சேர்ல ஒக்காந்து பாரு’