நவீன எழுத்தாளர் மசாலாப் படம் பார்க்கிறார்

>> Friday, January 18, 2013


இச்சூழல் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதுதான்.
எப்படியும் வருடமொருமுறை வாய்த்து விடுகிறது
தனது ஆகப்பழைய விமர்சனத்திற்கு
புதிய விவாதங்களை எழுப்பிய
இயக்குனரின் புத்தம்புதிய படம்.
வழக்கமான இருக்கையை விடுத்து சற்று மாறி அமர்ந்தாலும்
படம் பற்றிய கோணம் மாறிவிடும் ஆபத்திருப்பதால்
தமிழ்ச்சூழலின் இயங்குவெளியை சபித்தவாறே
இருளிலும் கவனித்து அமர்கிறார்.
திரையில் காட்சிகள் நகர்கின்றன
படம் லண்டனில் எடுக்கப்பட்டிருந்தாலும்
காட்சிகள் பார்சன் காம்ப்ளெக்சிலேயே எடுக்கப்பட்டிருப்பது
பத்து நிமிடங்களில் தெரிந்து
சத்தமாகவே விசிலடிக்கிறார்
ஒரு மசாலாப் படத்திற்கு வரநேர்ந்த துக்கவிசாரத்துடன்
காட்டமான மொழியில் குறிப்பேட்டில் பென்சிலை நகர்த்துகிறார்
அவ்வப்போது ஃபெலினியையும், கோடார்ட்டையும்
மழுங்கிய பென்சிலால் கோடி காட்டுகிறார்
அராமிக் மொழியில் வெளிவராத படமொன்றை
மசாலா இயக்குனருக்கு பரிந்துரைக்கவும் தவறவில்லை
சிறுநீர் இடைவேளைக்கு சற்று முன்னர்
முழு விமர்சனத்தையும் தயாரித்துவிட்டு
எதிர் இருக்கையில் கால்வைத்து
கிங்ஸ் பிடித்தவாறே
திரைக்குள் ஆழ்கிறார்.
அவ்வப்போது செல்பேசி
இருள் மூலைகளை வெறித்து
மீதி நேரம் கடத்தி வெளிவருகையில்
தனது மகனுக்கும் மகளுக்குமாக
மாலைக் காட்சிக்கான டிக்கட்களை
மறக்காமல் வாங்கிக் கொள்கிறார்.

2 comments:

Unknown January 23, 2013 at 3:52 PM  

முடிவா என்ன சொல்ல வர்ர?

Unknown January 23, 2013 at 3:53 PM  

முடிவா என்ன சொல்ல வர்ர?

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP