மழை – சில நினைவுகள்
>> Sunday, October 7, 2007
மரத்தடி இருக்கை அது
அன்று பெய்த மழை இன்றும் என் அறைக்குள்
மண்வாசனையை நிரப்புகிறது
மரத்தில் பட்ட மழை சடசடத்தபோது
நம்மிருவரின் சந்திப்பிற்காய்
கைதட்டுவதாய் புதுக்கவிதை கூறி சிரித்தாய்.
ஏதோவொரு ஆசிர்வதிக்கப்பட்ட கணத்திற்கு
அப்போது நாம் தயாரானதாய் ஞாபகம்
திடீரென என் பார்வை விலக்கி பிரிந்து
மழையில் நடந்து மறைந்தாய்.
இறுதி வரை வாய்க்கவில்லை
அப்படியொரு மழைக்கணம்
பிறிதொரு நாள்
கோடைமழையில் தனியே நனைந்தேன்
இப்போதும் நாம் சந்திக்கையில்
தவறாமல் அரங்கேறுகிறது
போலி திரைச்சீலைகளுக்குப் பின்னே
ஓர் மழை நாடகம்.
Read more...