பின்பனி

>> Tuesday, November 6, 2007


நீண்ட இரவோடு
பயணித்து அடைந்தாய்
என் அறை வாசலை கனவின் வழி.

அடர்ந்த பனிக்காற்றின்
குளுமையுடனும்
ஊதா நிறத்தில் பேசிய வார்த்தைகளாலும்
நிரம்பத் தொடங்கிற்று அறை.

வெளியேறுகையில்
விட்டுச்சென்ற வார்த்தைகளின்
படிமங்கள் சாளரத்தில்
காணக்கிடைக்கின்றன
பனித்துளிகள் போல்…

அந்தக் குளிர்வு வெகுகாலம்
அகலாமல் இருந்தது உறைந்த
புன்னகையுடன் கூடிய என்
புகைப்படத்துள்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP