தசாவதாரம் - விமர்சனங்கள் - தேவை மீள்பார்வை

>> Monday, June 23, 2008

புகுமுன்: இது தசாவதரம் படத்திற்கான விமர்சனம் இல்லை

தசாவதாரம் படத்துக்கு போதும் போதுங்கிற அளவுக்கு நம்ம பதிவர்கள் விமர்............சனம்.............! எழுதி ஏற்கனவே துவைச்சு காயப்போட்டுட்டாங்க! இதுல நாம வேற எழுதி மக்கள்கிட்ட வாங்கிக் கட்டிக்கணுமான்னு ஒரே யோசனை. இவ்வளவுக்கும் நான் படம் பார்த்தது மூணாவது நாள்தான்,அது வரைக்கும் விமர்சனம் எதுவும் படிக்கலை. பார்த்துட்டு வந்து எதாவது கருத்து சொல்லலாமேன்னு தமிழ்மணத்தப் பார்த்தா டவுசர் கிழிஞ்சிடுச்சு [ sincere thanks to : லக்கிலுக் J ]. பார்ப்பன மலம்கிறாங்க, தலித்துக்கு பூ’வராகன்’ அப்படின்னு எப்படி பேர் வைக்கலாம்கிறாங்க, நுண்ணரசியல்கிறாங்க...இன்னொரு பக்கம் தசாவதாரம் உலகத்தரமா? இந்தியத்தரமா ?... “நடுவர் அவர்களே, உலக சினிமா என்பதற்கான வரையறை என்னவென்றால்...” அப்படிங்கற ரேஞ்சுல பெரிய பட்டிமன்றமே நடக்குது. தசாவதர விமர்சன சுட்டிகளுக்கே தனிப்பதிவுன்னு தாவு தீர்ந்துடுச்சு போங்க, அப்போ முடிவு பண்ணினேன் நாம எதுக்கும் படத்த ரெண்டாவதுவாட்டி பார்த்துட்டு கருத்து சொல்லலாமேன்னு. நேத்து பார்த்துட்டேன், இப்போ சொல்றேன்... படம் நல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு..!


படத்த பார்க்கப்போறதுக்கு முன்னாடி ஒரு விசயத்த நீங்க கண்டிப்பா மறந்துடணும் அது என்னன்னா கமல் பத்து வேசத்துல நடிச்சுருக்கார் அப்படிங்கறதைத்தான். (கஷ்டம்தான்,இருந்தாலும் முயற்சி செய்யுங்க ). ப்ளாங்கா உள்ள போய் உக்காந்திங்கன்னா ஒரு pure entertainer பார்த்த திருப்தி இருக்கும். அத விட்டுட்டு வண்டிக்கு டோக்கன் போட்றவர்ல ஆரம்பிச்சி கோன் ஐஸ் விக்கிறவர் வரைக்கும் இது கமலான்னு ஆராய்ச்சி பண்ணிங்கன்னா குழப்பம்தான் மிஞ்சும், படத்த follow பண்ண முடியாது.

இந்தப் படத்தை பொறுத்த வரை கமல் ஒரு நடிகனாக வெற்றி பெற்றதைவிட, நல்ல திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றுள்ளார் என்ற லக்கியின் கருத்தை நான் வழிமொழிகிறேன். மற்றபடி படத்தின் கேரக்டர்கள், கேயாஸ் தியரி, (இந்த தியரி இப்போது வரைக்கும் புரியாதவர்கள், அந்நியன் படத்தில் அம்பியின் அப்பா ஃப்ளாஷ்பேக்கில் அந்த குட்டிப்பெண் இறந்த பின்னர் கோர்ட்டில் வைக்கும் வாதங்களைக் கேட்கவும், ஒரு மரணத்தை புற உலகில் சமுதாயத்தின் மற்ற நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் அந்தக் காட்சி சாமான்யனுக்கும் புரியக்கூடும்) பாடல்கள்,ஒளிப்பதிவு,வசனங்கள், அசின் மற்றும் முக்கியமாக மல்லிகா ஷெராவத் பற்றி ஏற்கனவே தேவைக்கும் அதிகமாக பதிவர்கள் துவைத்து விட்டதால் நான் துவைப்பதற்கு ஒன்றுமில்லை.




ஆனால்,எனக்கு மிகவும் உருத்திய விஷயம் மேக்கப். பாதி கெட்டப்களுக்கு மேக்கப் சரியில்லை, கண்களை உறுத்துகிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ பிளாஸ்டிக் சர்ஜனிடமிருந்து அரைகுறை ஆப்பரேஷனில் தப்பி வந்த பேஷண்டை பார்க்கிற உணர்வு. என்னயக் கேட்டா கமல் சார், நீங்களே பத்து கேரக்டர்லயும் நடிச்சுருக்க வேண்டாம், அப்புறம் எப்படி தசாவதாரம்னு பேர் வைக்கமுடியும்னு கேக்கறிங்களா, அதுவும் சரிதான். வைச்சாச்சு, நடிச்சாச்சு. nothing to do, enjoy J. ரப்பர் முகமூடிகள மாட்டிக்கிட்டு உணர்ச்சிகளக் காட்ட முடியாததால் ஒவ்வொரு கெட்டப்பயும் பேச்சுலயும் உடல்மொழியிலயும் வித்தியாசப்படுத்தியிருக்கார். அதுலயும் அந்த ஜப்பானியனின் உடல் மொழி சிறந்த வெளிப்பாடு.

//பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது - பினாத்தல் சுரேஷ் // அப்படின்னு சொன்னத நிரூபிக்கிற மாதிரி படத்துல சில காட்சிகள் இருக்குது. சாம்பிளுக்கு ஒன்னு - புஷ் வரும் சீன்களில் என் முன்னால இருந்த நபர்கள் “என்ன ஜார்ஜ் புஷ் இப்படியா மடத்தனமா பேசுவார்? சும்மா சொல்றானுங்க.” என்றனர். Michael moore-ன் Fahrenheit 9/11 படத்த பார்த்தால் புஷ்ஷோட அறிவும், சாதனைகளும் எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியவரலாம். புஷ் பற்றி அமெரிக்காவுலய அந்த ஓட்டு ஓட்றாங்க நம்மள கண்டுக்கமாட்டாங்கன்னு கமல் நெனச்சுருப்பார் போல! பொதுவா தெரியிற ஒரு சில குறைகள தவிர்த்துட்டு பார்த்தால் ஒரு மேல்தட்டு ரசிகனுடைய பார்வைக்கு என்ன தேவையோ அது கிடைக்கிறது அதே நேரத்தில் ஒரு கடைக்கோடி ரசிகனுக்கு இப்படத்தில் என்ன புரியவேண்டுமோ அது நிச்சயம் புரிந்துவிடும்.

இந்தப் படத்துக்கு வந்த விமர்சனங்களக் காட்டிலும் விமர்சனங்களுக்கு வந்த பின்னூட்டங்களால்தான் பயங்கர சென்சேஷன் ! அதப்பத்தி கொஞ்சம் சொல்லலாம்ணு நெனைக்கிறேன். எல்லா விமர்சனங்களும் நேர்மையா எழுதப்பட்டிருக்கான்ன்னா இல்லைன்னுதான் சொல்லணும். சில பேர் படத்த மொக்கைனு லேபிள் குத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு எழுதியிருந்தாங்க, இத வழிமொழிஞ்சு நெறய பின்னூட்டங்களும் ! யாரும் சொல்ற அளவுக்கு இந்தப்படம் மொக்கயோ மொண்ணயோ அல்ல. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு தமிழன் (தமிழர்களில் திராவிடத் தமிழன், ஆர்யத்தமிழன்னு ரெண்டு பிரிவு இருக்கறதா நான் நெனக்கல..! ) தமிழ்ப்படங்களுக்கான சந்தையை உலக அளவுல திறக்க முயற்சி பண்றப்போ நாம உதவி செய்யலனாலும் உபத்திரவம் செய்யக்கூடாது. கனடாவில் இந்தப்படத்த வால்ட் டிஸ்னி வெளியிட்டதா ஒரு செய்தி படிச்சேன், எத்தன இந்தியப் படங்கள் இதைப்போன்ற அயல் நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கு? விரல் விட்டு எண்ணிடலாம். நண்பர்களே “சொல்லுதல் யார்க்கும் எளியவாம்” அப்படின்னு இனியாவது புரிஞ்சுக்கங்க.


Biological weapon- chasing, சப்பையான ஒரு வரிக்கதை, இதுக்கு இந்த பில்டப் அப்படிங்கற ரேஞ்சுல ஒரு fwd மெயில் வந்துச்சு, உங்கள்ள சில பேருக்கும் வந்திருக்கலாம். அந்த நண்பர்கிட்ட நான் கேட்கறது life is beautiful அப்படின்னு ஒரு படம்...செகண்ட் வேர்ல்ட் வார் டைம்ல ஒரு யூதக்குடும்பம் ஜெர்மன் சிறைக்கூடத்துல படற அவஸ்தைகள், ப்பூ இது ஒரு கதையா? அப்படின்னு சிம்பிளா மெயில் அனுப்புவீங்களா? சைக்கிள தொலச்சுட்டு வேலவெட்டி இல்லாம ஊரெல்லாம் தேடுறான்யா, bicycle thiefனு இத ஒரு படமா வேற எடுத்திருக்கானுங்கன்னு பேசுவீங்களா? ஏன் ஒரு தமிழன் உலக சந்தைக்கான ஒரு படத்தைக் கொடுத்ததுக்கு இப்படி கொலவெறி காட்றீங்க? (மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் தசாவதரத்தோடு ஒப்பீடு செய்யவில்லை,நான் கூற விழைவது அனைத்து திரைப்படங்களுக்கும் ‘one line story’ என்கிற ஒன்று உண்டு என்றுதான்)

ஒரு பதிவர் தன்னோட பதிவுல, ரங்கராஜ நம்பி ‘ஓம் நமோ நாராயணாய’ என்று கத்தும்போது Brave heart படத்துல Mel Gibson சுதந்திரம் அப்படின்னு கத்துறத ஞாபகப்படுத்துனதா எழுதிருக்காரு. அதனால இப்ப என்ன? கமல் அப்படி சொல்லக்கூடாதா? ஸ்காட்டிஷ் விடுதலை வீரனுக்கும் பிரிட்டிஷ் இராணுவத்துத்துக்கும் நடக்குற போராட்டத்துல கத்துனா மட்டுமில்ல, சைவ வைணவ போராட்டத்துல காட்டுனாலும் அது வீரம்தான், நண்பர்களே, அடக்குமுறை வெவ்வேற வடிவங்கள்ல இருக்கலாம் ஆனால் சுதந்திரம் எல்லாருக்கும் ஒன்னுதான். ஒத்ததிர்வுகள் கலையுலகத்துல எப்பவுமே இயற்கைதான், கமல் நடிப்பில் யாரையும் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை.

வேறொரு பதிவோட பின்னூட்டத்தில பத்து ஆங்கில படங்களப் பார்த்து எடுக்கப்பட்ட படம் அப்படிங்கற கமண்ட் ரொம்ப வருத்தப்படவச்சது, ஆனால் கடைசி வரைக்கும் அந்த நபர், பத்து படங்களோட பேர சொல்லவேயில்லை, சார், அந்த பத்து படங்கள் என்னென்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம். ஒரு வெகுசன படைப்பு பார்வைக்கு வரும்போது எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும்,வரணும். வந்தால்தான் சீர் தூக்கிப்பார்க்கும் தன்மையும் வளரும், எவ்வளோ குப்பையா படம் எடுத்தாலும் மக்கள் ஏத்துப்பாங்க அப்படிங்கற மோசமான நம்பிக்கையும் ஒழியும். ஆனா, கருத்து சொல்றவங்க யாரும் நானும் பேசுறேன் பேர்வழின்னு குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி பேசக்கூடாது. முடிஞ்சா ஆதாரங்கள எடுத்து வைங்க, நம்மளே கமல் சார்கிட்ட போய் உண்மையக் கேட்போம். என்னங்க, நான் சொல்றது சரிதான?

சமீபத்தில் ஒன்பது அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன் (இந்த வரி டோண்டு சார் பதில்கள் மாதிரி இல்லையே..?) த.மு.எ.ச கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் சொன்னார். கதை எழுதுவதற்கு 24 அல்லது 28 (எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை) story knots மட்டுமே உள்ளன, நாம் எத்தகைய படைப்பைக் கொண்டுவந்தாலும் அது இதற்குட்பட்ட கலவையாகத்தான் இருக்க முடியும் என்றார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நண்பர் கூறிய பத்து ஆங்கிலப்படங்கள் மட்டுமல்ல தசாவதரமும் இவற்றுக்குள் அடக்கம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டுமென்பதால்தான்.

கமல்கிட்ட இருந்து அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் மாதிரிதான் எதிர்பார்க்கிறதா நெறயப்பேரு கருத்து சொல்லிருந்தாங்க, நல்லது நானும் ஒத்துக்குறேன். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையே. அதுவும் தமிழ்நாட்டுலதான ரிலீஸ் ஆச்சு? கமல் சார் தொடர்ந்து கலைப்படமே கொடுத்துக்கிட்டு இருந்தா வடபழனில பொட்டிகடை வைச்சு உக்கார்ந்து ஸீன் பண்ண வேண்டியதுதான். கண்ணாடிப்பூக்கள், குட்டி, மல்லி திரைப்படங்கள் தரத்துல மேம்பட்டு இருந்ததா சொல்ற நாம அந்தப் படங்களுக்கு என்ன மரியாதை காட்டினோம்? பார்த்திபன் சார் “குடைக்குள் மழை”னு ஒரு படம் எடுத்தார். கிட்டத்தட்ட A beautiful mind மாதிரி, ஆனால் என்ன ஆச்சு? கலெக்சன் லெவெல்ல அந்தப் படம் பப்படம் ஆயிடுச்சு! தப்பு யார் மேல? அந்தப் படம் சரியில்லயா? இல்ல வழக்கமான சினிமாவுக்கு பழகுன நம்ம மூளை ஏத்துக்கலயா?

நேத்து விஜய் டிவி ல ஒளிபரப்பான மதன்ஸ் திரைப்பார்வைல K.S.ரவிக்குமார், யூகி சேது, மதன் மற்றும் பார்வையாளர்கள் கலந்துக்கிட்டாங்க, நெறயப்பேர் பாத்திருப்பீங்க. அதுல கவனிக்க வேண்டிய விசயம் ரவிக்குமார் சாரோட முகத்தைதான். ரொம்ப திருப்தியா, சிரிச்சுக்கிட்டே இருந்தார். இவ்ளோ பெரிய பட்ஜெட் படம் படுத்திருந்தா டைரக்டர் இப்படியா சிரிச்சுக்கிட்டு இருப்பாரு? படத்தோட ரிசல்ட் என்னங்கிறது அவர் முகத்துல தெரியுது. பேச்சின்போது யூகி சேது சொன்ன முக்கியமான பாய்ண்ட் - ‘ஆங்கிலம், இந்தி திரைப்படங்களுக்கான ஆடியன்சும், மார்க்கெட்டும் ரொம்ப பெருசு. ஆனா நாம ஆறு கோடி பேர மட்டுமே நம்பி படம் எடுக்கிறோம், ஹாலிவுட்ல எதாவது ஒரு உணர்ச்சிய மையப்படுத்தி எடுக்கப்படற படங்கள் ஒரே சுவை கொண்டது, ஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு ஒரே படத்துல நெறய சுவைகள் தேவைப்படுது, இது தலைவாழை விருந்து, தமிழ்நாட்டுல வேர்களை வச்சுக்கிட்டு உலக மார்க்கெட்டுக்கு எடுக்கப்பட்ட படம்’ அப்படின்னு சொன்னார். கரெக்ட்தான!




இன்றைய தேதியில் டெக்னிக்கலான முன்னேற்றத்துக்கு இந்தியாவில் தற்போதைய சிறந்த படம் தசாவதரம்தான். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வரக்கூடிய மாற்றங்களுக்கு இந்தப்படம் ஒரு விதை..! இப்படத்தோட வெற்றி பன்னாட்டு சினிமா கம்பெனிகளின் கவனத்தை தமிழ் படங்கள் மேல திருப்பும். தமிழ் சினிமா ஹாலிவுட் மாதிரி ஒரு கார்ப்பரேட் செக்டாராக மாறும். நிதி பெருத்த நிறுவனங்களின் வருகை புதிய முயற்சிகளுக்கான அடித்தளத்தை உண்டாக்குவது மட்டுமின்றி ஹாலிவுட் மாதிரி ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஸ்க்ரீன்ப்ளே மேக்கிங் போன்றவற்றை புதிய, தனிப்பட்ட துறைகளா மாற்றலாம். தொழில்நுட்பமும் படங்களின் பட்ஜெட்டும் வளரும் அதே நேரத்தில் நாம் நமது மண்ணையும், மக்களையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிற தரமான படங்களை கொடுப்பதின் மூலமாக ஈரானிய திரைப்படங்களைப்போல் தமிழ்ப் படங்களையும் உலக சந்தையில் நிலைநிறுத்தலாம்.

இந்தப்படம் முடிந்தவுடன் கமலுக்காகவும் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் நான் கைதட்டினேன். நீங்களும் தட்டுங்கள், அது கமல் போன்ற சிறந்த கலைஞனின் உழைப்புக்காக மட்டுமல்ல, எந்தவொரு கலைஞனும் விருதுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பது ரசிகர்களின் அங்கீகாரத்தைதான்..!

28 comments:

Sridhar V June 23, 2008 at 1:35 AM  

நல்ல ஆக்கபூர்வமான பார்வை. தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

ராஜ நடராஜன் June 23, 2008 at 1:36 AM  

பதிவை ரசித் தேன்

Athisha June 23, 2008 at 2:00 AM  

;-) நீங்களும் போட்டாச்சா..

Athisha June 23, 2008 at 2:00 AM  

;-) நீங்களும் போட்டாச்சா..

ஆ.ஞானசேகரன் June 23, 2008 at 2:09 AM  

உண்மை வெளிப்பட்டுக்கு நன்றி! நன்றி!

ஜோ/Joe June 23, 2008 at 2:26 AM  

அருமை! அருமை!!

புருனோ Bruno June 23, 2008 at 2:28 AM  

//பொதுவா தெரியிற ஒரு சில குறைகள தவிர்த்துட்டு பார்த்தால் ஒரு மேல்தட்டு ரசிகனுடைய பார்வைக்கு என்ன தேவையோ அது கிடைக்கிறது அதே நேரத்தில் ஒரு கடைக்கோடி ரசிகனுக்கு இப்படத்தில் என்ன புரியவேண்டுமோ அது நிச்சயம் புரிந்துவிடும்.//

உண்மை. http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html

முரளிகண்ணன் June 23, 2008 at 2:51 AM  

nice

சேரலாதன் பாலசுப்பிரமணியன் June 23, 2008 at 3:44 AM  

very nice article!

வந்தியத்தேவன் June 23, 2008 at 4:25 AM  

மிகவும் தெளிவான தேவையான விமர்சனம் சில சைகோக்கள்(மன்னிக்கவும் வேறு பெயர் தெரியவில்லை) ஒன்றுக்கு பத்தாக பிண்னூட்டங்கள் இட்டு படத்தினை மொக்கை என உரத்த குரலில் கத்த முனைந்து களைத்துவிட்டார்கள் போல் தெரிகின்றது. தயவு செய்து சும்மா மொக்கை விளங்கவில்லை என கூவும் விஷமிகளின் பின்னூட்டங்களை இடாதீர்கள். ஒரு தமிழன் உலகில் கொடிகட்டிப் பறப்பது இவர்களுக்குப் பிடிக்காது. பார்ப்பன ஆனந்தவிகடன் உட்பட சிலர் எரிச்சலின் உச்சத்திற்க்கு சென்றுள்ளார்கள். என்ன செய்வது தமிழனுக்கு எதிரி தமிழன் தான்.

Anonymous June 23, 2008 at 5:10 AM  

Nice view!

chandru / RVC June 23, 2008 at 6:43 AM  

வாழ்த்துகளுக்கு நன்றி Sridhar.

chandru / RVC June 23, 2008 at 6:51 AM  

ராஜ நடராஜன், நன்றி.
//பதிவை ரசித் தேன் // - space விட்டது இயல்பாக நடந்ததா?

chandru / RVC June 23, 2008 at 7:56 AM  

அதிஷா, ஏதோ பதிவு போட வேண்டும் என்பதற்காக இதை எழுதவில்லை. ஒரு சிறந்த
கலைஞனின் முயற்சி தவறான புரிதல்களால் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக் எழுதப்பட்டது. வருகைக்கு நன்றி

chandru / RVC June 23, 2008 at 8:17 AM  

உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் நோக்கம், சரியான எதிர்வினைகள் இப்படத்திற்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே. வருகைக்கு நன்றி,ஞானசேகரன் & ஜோ

chandru / RVC June 23, 2008 at 11:13 PM  

டாக்டர் புருனோ நன்றி, தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது

chandru / RVC June 24, 2008 at 12:49 AM  

முரளி கண்ணன், சேரல் மற்றும் அனானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வந்தியத்தேவன் இணையத்தை தொடர்ந்து பார்வையிட இயலாததால் உங்களுடன் விரிவாக பிறகு உரையாடுகிறேன். நன்றி

ஜமாலன் June 24, 2008 at 1:00 AM  

நண்பருக்கு..

நான் இந்த படம் இன்னும் பார்க்கவில்லை இருந்தாலும் இது குறித்து வந்த பல விமர்சனங்களில் உங்களது மீள்பார்வையும் ஒன்று. நீங்கள் விமர்சனம் குறித்த ஒரு மீள்பார்வையை எழுதி உள்ளீர்கள். கீழ்கண்ட சுட்டியில் உள்ள இந்த விமர்சனம் நான் வாசித்ததில் சற்றே நுட்பமாக செய்யப்பட்டுள்ளது. பாருங்கள்.

http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htm

//கதை எழுதுவதற்கு 24 அல்லது 28 (எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை) story knots மட்டுமே உள்ளன,//

இக்கருத்து ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மிக முக்கியமான நாட்டுப்புற ஆய்வாளரும் அமைப்பியல் ஆய்வுமுறையாளரும் ஆன விளாடிமிர் பிராப் தனது ரஷ்ய நாட்டுப் புறக்கதைகள் மற்றும் உலக இலக்கியங்களை ஆய்வு செய்து 31 கதைசொல் உத்திகளே உள்ளது என்றும் எந்த கதைசொல் உத்திக்கும் 7 பாத்திர வடிவங்களே உள்ளது என்றும் முடிவுகளை வெளியிட்டுள்ளார். இவரது முக்கிய பின்பற்றாளர்களில் ஒருவர் உலகப் புகழ்பெற்ற அமைப்பியல் மாணுடவியல் ஆய்வாளர் லெவிஷ்டராஸ். பிராப் பற்றி http://www.isfp.co.uk/russian_thinkers/vladimir_propp.html இங்கு நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தசாவாரம் கதை மட்டமின்றி எந்த கதையும் சொல்லுதலில்தான் உள்ளதே தவிர கதையின் கருவிலோ உருவிலோ அல்ல. தவிர சினிமா என்பது மையமாக வாசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பு அல்ல. இயல்பிலேயே சினமா ஒரு மையமற்ற படைப்புதான். அதன் காட்சிகள் பிம்பங்கள் ஆகியவைதான் முக்கியம் என்பதால் படத்தை ஒற்றைப் பரிமாணமாக பார்த்து விமர்சிப்பது சரியான பார்வை அல்ல. கமலின் படத்திலேயே மிக முக்கியமான படம் அன்பே சிவம். அதை சிலர் கடவுள் சார்பு படமாக வாசிக்கிறார்கள். அதனால் பிரதி என்பது வாசிப்பவன் உருவாக்குவதுதான். கமல் என்ன சொன்னார் என்பதல்ல நாம் என்னவாக புரிந்து கொண்டு பேசிக்கொண்டுள்ளோம் என்பதுதான். அதைதான் அவர் ஒற்றை வார்த்தையில் எந்த பதிலம் தற்சமயம் சொல்வதாக இல்லை என் கூறிவிட்டார். சம்பந்தம் இல்லாத பின்னோட்டமோ? :)

வந்தியத்தேவன் said...

//மிகவும் தெளிவான தேவையான விமர்சனம் சில சைகோக்கள்(மன்னிக்கவும் வேறு பெயர் தெரியவில்லை) //

மிகவும் தெளிவாக உள்ள நண்பர் ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார். பைத்தியக்காரர்கள் (சைகோக்கள்) கருத்துக்கள் அவரது கருத்துக்கள். அதற்கு ஏன் இந்த கொலைவெறி? எல்லோரும் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதோ மாற்றக்கருத்தே சொல்லக்கூடாது என்பதோ தெளிவான சிந்தனை அல்ல அதுவும்... ஒருவகைதான்... :)

நன்றி
ஜமாலன்.

Thirumalai June 24, 2008 at 5:05 AM  

padam paarthu migavum pidithu ponavargal thangal ottu motha aadhangathayum therivithathu pola irundhathu ungal oruvarin vimarsanamum,paarvaiyum.ungaludan naanum kaikorkiraen. nandri nanbarae.

chandru / RVC June 24, 2008 at 8:57 AM  

நண்பர் ஜமாலன், வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.
//கதை எழுதுவதற்கு 24 அல்லது 28 story knots (எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை) மட்டுமே உள்ளன,//
மேற்கண்ட இந்த கருத்தை நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கேட்டேன்(1997), அதனால் எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை என்பதையும் குறிப்பிட்டு விட்டேன்.தாங்கள் அளித்த தகவல்கள் மிகுந்த உபயோகமாய் இருந்தன.
எந்தப் படைப்பும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது இல்லை, ஆனால்,விமர்சனத்துக்கான மரபுகளை முற்றிலும் பின் தள்ளி புழுதி வாரித்தூற்றியே தீருவோம் என்று எழுதப்பட்ட பதிவுகளே என்னை இப்பதிவை எழுதத்தூண்டிற்று. படத்தின் குறைகளை நானும் சுட்டிக்காட்டியுள்ளேன், ஆனால் அதே நேரத்தில் திரு.கமல ஹாசன் மற்றும் குழுவினர் இப்படத்தில் கொட்டியுள்ள உழைப்பை கேவலப்படுத்தக்கூடாது.
//கமல் என்ன சொன்னார் என்பதல்ல நாம் என்னவாக புரிந்து கொண்டு பேசிக்கொண்டுள்ளோம் என்பதுதான்// அதே,நானும் கூறவிழைவது.
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..!

butterfly Surya June 24, 2008 at 10:21 AM  

GOOD. XLENT COMMENTS. UN BIASED..

SALUTE TO KAMAL JI

வந்தியத்தேவன் June 24, 2008 at 6:12 PM  

//மிகவும் தெளிவாக உள்ள நண்பர் ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார். பைத்தியக்காரர்கள் (சைகோக்கள்) கருத்துக்கள் அவரது கருத்துக்கள். அதற்கு ஏன் இந்த கொலைவெறி? எல்லோரும் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதோ மாற்றக்கருத்தே சொல்லக்கூடாது என்பதோ தெளிவான சிந்தனை அல்ல அதுவும்... ஒருவகைதான்... :)//

நண்பர் ஜமாலனுக்கு
நான் உணர்ச்சி வசப்படக்காரணங்கள் என் வலையில் மிகவும் தெளிவாக எழுதியுள்ளேன். பலர் கமலின் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியில் படத்தை விமர்சிக்கிறார்களே ஒழிய உண்மையான நடுநிலையான கண்ணோட்டம் கொண்டு விமர்சிக்கவில்லை. நான் பெயர் குறிப்பிடவிரும்பவில்லை. ஒரு பிரபல பதிவர் பெரும்பாலான வலைகளில் தன் எதிர்க்கருத்தை தெரிவித்துள்ளார். அது அவரது சுதந்திரம் ஆனால் அதற்காக ஒரு பதிவில் 10 இடங்களில் படம் மொக்கை மொக்கை எனக்கூவுவது அவரின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகின்றது. இதுபற்றி நண்பர் லக்கி மிகவும் தெளிவாக எழுதியுள்ளார் கமலின் மேல் இவ்வளவு காண்டு என்ற பதிவில்.

நீங்கள் கூறியதுபோல் கருத்துச் சுதந்திரம் ஒருவருக்கு தேவை அதற்காக அனைத்தையும் கருத்துச் சுதந்திரம் என விட்டுவிட முடியாது. சிங்களவர்களின் களம் ஒன்றில் பெரும்பாலானவர்கள் தசாவதாரத்தை மிகவும் பாராட்டியே எழுதியுள்ளார்கள். பெரும்பாலான ஆங்கில சிங்களப் பத்திரிகைகளும் படத்தைப்பாராட்டியே எழுதியுள்ளார்கள். இவர்கள் கமலின் நடிப்பையும் தொழில்நுட்பத்தையும் பாராட்டியதோடு வேறு சில இலங்கை அரசியல்களும் நடத்தியுள்ளார்கள். அதனை விட்டுவிட்டுப்பார்க்கும்போது படம் பலருக்கு இன மொழி மத வேறுபாடின்றி பிடித்திருக்கின்றது. ஆனால் தமிழர்கலீன் கலாச்சாரக் காவலர்கள் என்கின்ற விகடனோ கமலின் பகுத்தறிவை பொறுக்காமல் படத்தை குருவி பழனி படங்களூக்கு கொடுத்த மார்க்கையே கொடுத்திருக்கிறது.

எந்தவொரு ப‌ட‌த்தையும் இன்னொருவ‌ரின் ப‌ட‌த்துட‌ன் ஒப்பிடுவ‌து த‌வ்றாகும். வ‌சூல் ரீதியாக‌ ஒப்பிட்டுவ‌தும் த‌வ்றாகும் கார‌ண‌ம் விலைவாசிக‌ள் நாளுக்கு நாள் அதிக‌ரிக்கும் இக்கால‌த்தில் நேற்று 100 ரூபா ரிக்கெட்டுக்கு கொடுத்த‌வ‌ன் இன்று 200 ரூபா கொடுக்கின்றான். அதே நேர‌ம் அந்த நடிகனின் முன்னைய படங்களுடன் ஒப்பிடலாம். தசாவதாரத்தை அன்பேசிவம், ஹேராம், விருமாண்டி படங்களூடன் ஒப்பிடமுடிந்தாலும் அவற்றை விட வசூல்ராஜா, பஞ்சதந்திரம் போன்ற மசாலா அல்லது பொழுதுபோக்கு படங்களுடன் ஒப்பிடுவதே சிறந்தது. இப்படத்தில் கமல் எத்தனையோ நல்ல கருத்துகள் சொன்னாலும் அவற்றை சொன்னவிதம் வித்தியாசமானது, பட்டர்ஃபிளை எபக்ட் எல்லாம் அனைவருக்கும் புரியாது. அதே நேரம் இப்படம் சாமானியனுக்கும் புரிந்திருக்கிறது.

மிகவும் நீண்ட பின்னூட்டம் தேவை ஏற்படின் மீண்டும் சந்திப்போம்.

ஜமாலன் June 25, 2008 at 12:48 AM  

நண்பர் வத்தியதேவனுக்கு..

நீங்கள் சுட்டும் பின்பலங்களில் உங்கள் நியாயம் சரியானதே. தவிரவும் நான் இந்த பின்புலத்தின் அடிப்படையில் என் கருத்தை முன்வைக்கவில்லை. நான் படித்த ஒருசில கருத்துக்களின் அடிப்படையிலேயே சொன்னேன். நீங்கள் என் சொல்கிறீர்கள் என்பதை எப்படி சொல்கிறீர்கள் என்பது் தீர்மானிக்கிறது. அதில் நீங்கள் பயன்படுத்திய “சில சைக்கோக்கள்” என்கிற வார்த்தைதான் நெருடலாக இருந்தது. உரையாடலினை மறுக்கும் அந்த சொல்லிற்காகாத்தான் அந்த பின்னொட்டத்தை எழுதினேன். பொதுவாக கமல் படங்களில் காத்திரமான விஷயங்களை மிகவும் நுட்பமாகவும் முழு பிரக்ஞையுடனும் கையாள்பவர் கமல். அவரது ஆளவந்தான் அப்படிப்பட்ட ஒரு சிறந்த உளவியல் படம். அதில் தமிழில் வலுவாக பிராய்டிய உளவியலையும் காக்கரின் “நல்ல தாய் கெட்டதாய்” என்கிற முரண்பாட்டையும் கையாண்டிருந்தார்கள். அது வணிக லேபிலில் வந்த படம்தான். அதனால் இது வணீகரீதியான படமா? அல்லத கலைப்படமா தரமான படமா என்பது பிரச்சனை அல்ல. இப்படம் ஒருவகையில் அதை முறியடித்துள்ளது என்றே நினைக்கிறேன்.

மற்றபடி கருத்து சுதந்திரம் பற்றிய உங்கள் புரிதல் சரியானதே. பகுத்தறிவு என்பது பிறறிதொரு ஒழுங்கமைப்ப. அதுவும் வன்முறைதான் என்பதே எனது நிலைப்பாடு. பகுத்தறிவு என்பது நவின தொண்மம். அதைதான் அப்படம் சொல்கிறது என நினைக்கிறேன்.நான் படமம் பாரக்கவில்லை. இங்கு டோரண்ட் சைட்டில் 4 நாளாக இறங்கி 45 சதவீதத்தைதான் தொட்டிருக்கிறது. பார்க்கலாம்.

ஆமா சொல்லவே இல்ல யாரு அந்த வலைஉலக பிரபலம் என்று. அப்படி ஆளெல்லாம் இருக்காங்களா? தெரியவேயில்ல.. :)

chandru / RVC June 25, 2008 at 7:10 AM  

நண்பர் திருமலை கோணேரி, கைகோர்த்தமைக்கு நன்றி ..!

chandru / RVC June 25, 2008 at 7:21 AM  

நன்றி சூர்யா.
உரையாடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஜமாலன், வந்தியத்தேவன் - நன்றி

chandru / RVC June 26, 2008 at 12:22 AM  

அனானி, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டி எழுதியதன் மூலம் நமைச்சல் தீர்ந்ததா? மகிழ்ச்சிதானே?சொந்தப்பெயரில் வந்து கருத்துடன் மோத முடியாத உன் போன்ற பேடிகளை நான் ஒருபோதும் கண்டுகொள்வதேயில்லை. திரும்பி வர நினைக்காதே, அப்படியே ஓடி விடு. தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது, "வால்" ஒட்ட நறுக்கப்படும்..!

மருதநாயகம் June 27, 2008 at 12:42 PM  

//கமல்கிட்ட இருந்து அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் மாதிரிதான் எதிர்பார்க்கிறதா நெறயப்பேரு கருத்து சொல்லிருந்தாங்க, நல்லது நானும் ஒத்துக்குறேன். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையே//

விருமாண்டி வெற்றி பெற்ற படம் தானே

coolraja March 18, 2010 at 1:52 AM  

very neutral review

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP