தனிப்பறவை

>> Sunday, September 14, 2008




தெளிவானதொரு பிரக்ஞையற்ற
சூழலில் இந்த அறையிருக்கிறது
அறைக்குள் நான் வசிக்கிறேன்
சிந்தனை, சுய எள்ளல்,
நினைவு தப்புதல், நீளும் பகல் தனிமைகள்,
சுயமைதுனம், போதை-
பெருகும் ஆற்றாமைகளின் பட்டியல்

அறைக்கு வெளியே இருப்பவர்கள்
குறித்து எதுவும் எனக்கு தெரியாது
இரவைக் கடக்க தேவை எட்டு மணி நேர மரணம்.

8 comments:

MSK / Saravana September 14, 2008 at 8:49 AM  

நீங்களுமா???!!!!

பின்னீட்டீங்க தலைவா..

anujanya September 14, 2008 at 9:48 PM  

சந்திரா,

'தேவை எட்டு மணிநேர மரணம்' - தனிமையின் கொடுமையை விவரிக்கும் வரிகள். இது எல்லாம் சும்மா கவிதைக்கு தானே? நல்லா இருக்கு.

அனுஜன்யா

chandru / RVC September 15, 2008 at 1:13 AM  

//நீங்களுமா???!!!!//
சரா, யூ டூ புரூட்டஸ் மாதிரில இருக்கு :)

chandru / RVC September 15, 2008 at 1:15 AM  

நிச்சயமா கவிதைக்குதான் அனு. இயல்பில் முடியாததால்தான் கவிதைங்கிற பேர்ல தலைமறைவாகுறது. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் September 15, 2008 at 3:16 AM  

நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும். கடைசி வரி பிடித்திருக்கிறது.

MSK / Saravana September 15, 2008 at 9:35 AM  

//சரா, யூ டூ புரூட்டஸ் மாதிரில இருக்கு :)//

அப்படியிலீங்க்னா.. நீங்களும் என் இனமா?? என்று கேட்கிறேன்..

Unknown September 15, 2008 at 11:12 PM  

'இரவைக் கடக்க தேவை எட்டு மணி நேர மரணம்'.
வலிகள் சுமந்த வரி.. ரொம்ப நல்லா இருக்கு..!! :)

ச.முத்துவேல் December 5, 2008 at 2:58 AM  

'தேவை எட்டு மணிநேர மரணம்' -
சலனமடைந்த நெஞ்சின் வரிகள்
வாசகனையும் சலனப்படுத்துகிறது.
அதுதானே கவிதை!

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP