தரிசனம்

>> Wednesday, January 21, 2009


அன்றாடம் வாய்க்கிறது
புலியைக் காணும் தருணங்கள்
தீராத வன்மத்தோடு சிரிக்கும் காடுகள்
எனக்கும் புலிக்கும் பரிச்சயமானவை
சமயங்களில் புலிமேல் நான்
சில நேரங்களில் என்மேல் புலி
வால் பிடித்து தலை பிடித்து
புலி வேட்டையில் நான்
மனித வேட்டையில் புலி
சுழலும் சக்கரவியூகம்.
அகத்தில் பார்க்கின்
நான் என்றொரு திரிபு
புலி என்றொரு நிழல்.

*ரமேஷ் - பிரேமிற்கு

6 comments:

Ayyanar Viswanath January 21, 2009 at 8:01 AM  

வாங்க புலி :)

பிளாக் இருக்கிறது நினைவுக்கு வந்திடுச்சா :)

chandru / RVC January 21, 2009 at 8:08 AM  

ஆம் அய்ஸ். ஞாபகமறதில கஜினி மாதிரி ஆயிட்டேன்ல..!
புலிய நீங்க விட்டுட்டீங்க, நான் பிடிச்சுட்டேன் :)

MSK / Saravana January 24, 2009 at 9:37 AM  

நீங்களுமா.. அடர் கானக புலியா..


நானும் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.. ;)

chandru / RVC January 25, 2009 at 7:37 AM  

அடர்கானக புலிதான் சரா ! நிறைய புலி கவிதைகள் ப்திவேற்றலுக்கு தயாராய் உள்ளன. ஒவ்வொன்றாய் பதிவிடத் திட்டம். ரமேஷ் பிரேம் வாசித்து புலி நம்மை பாதிக்கவில்லையென்றால் எப்படி?

உயிரோடை January 28, 2009 at 10:45 PM  

அய்யோ என்னம்மா எழுதறீங்க.

கவிதை அருமை.


நிழலை புலியோடு ஓப்பிட்டு இருக்கீங்க.

எனக்கு அது நிழல் போல் துரத்தும் அல்லது படுத்தும் நினைவுகள், ஓய்வு உறக்கம் தடுக்கும் அயிற்சி தரும் பணி இன்னும் பிறவோடு கவிதை நிழலை ஒப்பிட்டு பார்க்க தோணுது.

என்ன ரசனைங்க உங்களுக்குன்னு திட்டாதீங்க

anujanya February 1, 2009 at 6:04 AM  

அட்டகாசம். இவ்வளவு நாட்கள் எழுதாமல் இருப்பது நியாயமில்லை :)

அனுஜன்யா

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP