பாதசாரி

>> Thursday, July 5, 2007

துயரின் மீது பயணிக்கும்
விதியின் பயணி நான்.
எல்லைகளற்று தனியே
நீள்கிறது என் பயணம்
வழித்துணையாய் தொடர்வது
உன் தேவதைகளும் என் சாபங்களும்.
பாதை நெடுக படர்ந்திருக்கின்றன
வலி மிகுந்த ஞாபகங்கள்.
நெறி பிறழ்ந்த விளக்குகள் என் மீது
கருமையை உமிழ்கின்றன,
இரவின் மடியிலிருந்து கசியத் துவங்குகிறது
உனது இசை…
என் நடை வேகப்படுகிறது.
மெல்லிய சிறகு போல
உன் கானம் என் மேல் படர்கிறது…
பாரம் தாங்காமல் ஓடத்துவங்குகிறேன்
எட்டாத்தொலைவில் எங்கோ கேட்கிறது உன் கானம்…
பாதைகள் அற்ற முடிவில்
உன் பேரன்பின் முன்னே மண்டியிடுகிறேன்.
நீ என்னுள் நிரப்ப முயன்ற
பரிவின் இசை வெளியில் கரைகிறது.
முன்னும் பின்னும் அற்ற விதியின் கரம்
என்னைச் சுட்டுகிறது-உனக்கு தேவனாய்...!
பின்னும் வியாபித்திருந்த அமைதி
அறுந்த யாழின் நரம்பை மீட்டியது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP