எனக்கு தெரிந்த வானத்தின் கதை…

>> Saturday, August 25, 2007

பறவைகளை தொலைத்துவிட்ட வானம்
ஒன்று என் அறையில் உள்ளது.
காலநிலை மாற்றங்களுக்கு இச்சிறிய அறை
உட்பட்டது இல்லையெனினும்
பகலும், இரவும் வரும்.
அவ்வப்போது மழையும் புயலும் கூட உண்டு.
இடியும் மின்னலும் வானத்திற்கு பிடிப்பதில்லை
இரைச்சலற்ற மழை தன்னை
மோட்சத்திற்கு இட்டுச் செல்வதாய் வானம் திடமாய் நம்பியது
இருள்வேளைகளில் வரும் வெளவால்களை
கண்டால்தான் வானத்திற்கு பயம்.
என் காதலியிடம் எங்கள் திருமணத்திற்கு
இரைச்சலற்ற மழையை பரிசளிப்பதாய் சத்தியம் செய்திருக்கிறது.
பகல் முழுதும் தொலைந்த பறவைகளுக்காக காத்திருந்து
மாலையில் சிவந்த கண்களுடன்
வீடு திரும்பும் வானத்தை எதிர்கொள்வது கடினம்.
ஒட்டடையும் பல்லியின் எச்சமும் படிந்த வானம்
வெவ்வேறு சிறகுகளை அடையாளமாய் வைத்துக் கொண்டு
இழந்த பறவைகளை தேடிக் கொண்டிருக்கிறது.
ஒருபோதும் புதிய பறவைகளை அனுமதித்ததில்லை.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP