உருவெளிச் சிதைவுகள் (3) - Adult content

>> Friday, July 25, 2008





‘என்னய உங்களுக்கு அவ்வளவு புடிச்சுருக்கா?’ என்று கேட்டாள் கண்ணாடியிலிருந்த அனிதா!

‘ம்ம், புடிச்சுருக்கு உன்ன, உன்ன விட உன் அக்குளை.’

‘ச்சீ, அதெயெல்லாமா பார்த்து பொண்ணு புடிச்சுருக்குன்னு சொல்றது.’

‘அத சாதாரணமா பேசாத, நெறயப் பேரோட தாம்பத்ய வாழ்க்கை மோசமாயிருக்கக் காரணம் pheromons match ஆகாததுதான். கூடிய சீக்கிரம் அதீதன் சொல்ல நண்பர் சுந்தர் இதப்பத்தி ***** ***** 45(18) அல்லது ***** **** 45 (27) ல எழுதுவார்.’

‘அவுங்க ரெண்டு பேரையுமே எனக்குத் தெரியாது.’

‘சுந்தரைத் தெரிஞ்சுக்கோ, அதீதனை தெரிஞ்சுக்க வேண்டாம்.’

‘ஒரு தடவை உன் அக்குள smell பண்ணிக்கட்டுமா?’

‘ம், பண்ணிக்கங்க.’ அனிதா கைகளைத் தூக்கியவாறு ஒயிலாக சாய்ந்து நின்றாள். விரகத்தில் கண்கள் கிறங்கி, சற்றே பிளந்து நிற்கும் உதடுகளை முத்தமிடத் தோன்றியதை தனிக்கதையாக எழுதுகிறேன்.

‘ம்ம்ம், ம்ம்ம்ம், nice.’

‘ச்சீ naughty boy.’

கதவு திறந்து அனிதா வெளிப்பட்டாள். பிம்பம் கண்ணாடியிலிருந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் இங்க நிக்கறீங்க, எனக்கு ஹாலுக்குப் போக வழி தெரியும்’ என்றாள் சிரித்துக்கொண்டே.

‘அனிதா நல்ல smell அது, you know…’

‘என்ன சொல்றிங்கன்னு புரியல.’

ஹாலிலிருந்து மீசை கூப்பிட்டது,

‘அனிதா வர்றப்போ தண்ணி கொண்டு வாம்மா.’

‘ok uncle கூப்பிடுறார், உங்க நம்பர் கொடுங்க, நைட் கூப்பிடுறேன்.’

‘இல்ல, அது வந்து…’

Ting ting…கோபி உள்ளே நுழைந்தான், ‘சரியான வெயில்டா மச்சி’ என்று கூறியவாறு என்னைப் பார்த்தவன் அனிதாவையும் பார்த்தான்.
லேசாக சிரித்துக் கொண்டே ‘ஓகே மச்சி லேட்டாயிடுச்சு. அப்படியே கெளம்புறோம், நீ அவசியம் முந்தின நாள் நைட்டே வந்துடணும்.’

“ஏன் கல்யாணத்தன்னி நைட்டுக்கு கூப்பிட்டு பக்கத்தில வச்சுக்க வேண்டியதுதான உன் ப்ரெண்டை?” இது அந்த கன்னடத்துக் கபோதியின் குரல்தான்.

‘சரிடா கண்டிப்பா வந்துடறேன். நீ கிளம்பு, கீழ் ரூம்ல கொஞ்சம் வேலயிருக்கு.’

‘கீழ் ரூமா? நீ first floor ல இருக்கடா.’

‘இல்ல இல்ல,கீழ் வீட்டுக்காரங்க வர சொன்னாங்க அத சொன்னேன். நீ கெளம்புடா.’

“நல்ல வேளை. அக்குள் புகழ் அனிதாவின் நிலைமை கவலைக்கிடமாகும் முன் கோபி வந்துவிட்டான்,” இது டிவியில் இலங்கை அறிவிப்பாளரின் குரல்.

தொடரும்

9 comments:

Anonymous July 26, 2008 at 2:10 AM  

காமக்கதைகள்னே டைட்டில் கொடுத்திருக்கலாமெ?

ராசன்

MSK / Saravana July 26, 2008 at 4:15 AM  

நண்பரே..
படிக்க படிக்க என்னை சுற்றி சில அருவங்கள் அலைவதை போலிருக்கிறது..
:)

MSK / Saravana July 26, 2008 at 4:16 AM  

எனக்கொரு சந்தேகம்..
நானொரு சாதாரண வாசகன்..
அது என்ன முன்/பின் நவீனத்துவம், புனைவு, கழிவிரக்கம், மீள்பதிவு..
இதன் அர்த்தம் மற்றும் அளவுகோல்கள் என்ன??
முடியும்பட்சதில் விளக்கவும்..
:)


உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்..
தல சுத்துது..

chandru / RVC July 26, 2008 at 7:38 AM  

ராசன், காமக்கதைகள் (அய்யய்யோ, சென்சார் பண்ணிடுறேங்க).... **** **** கதைகள் தான் சுந்தர் சார் எழுதுறாரே! இது பாலியல் வறட்சியில் மனம் பிறழ்ந்தவனைக் காட்டும் முயற்சி. வருகைக்கு நன்றி

ரௌத்ரன் July 26, 2008 at 7:43 AM  

நன்றாக இருக்கிறது நண்பரே...

TBCD July 26, 2008 at 10:22 PM  

:)

chandru / RVC July 26, 2008 at 11:32 PM  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணகுமார்.
என்னைப் பொறுத்த அளவில்
தனிப்பட்ட விளக்கம்னு எதுவும் இல்ல, உலகம் இயக்கத்திலிருக்கிறது, கட்டுப்படாமல். அவ்வளவே !
"உண்மையை எழுதப்போகிறேன் எனும் நேரத்தில் நான் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிடுவேன்"
அப்படின்னு, அய்யனார் தன்னோட ஒரு பதிவுல சொல்லிருப்பார்.
நீங்க எதுக்கும் 'தல' அய்யனாரோட வலைப்பக்கத்த ஒரு தடவ பாருங்க, உங்க தலசுத்தல் நின்னுடும்..!

chandru / RVC July 26, 2008 at 11:35 PM  

ரெளத்ரன், வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி

chandru / RVC July 27, 2008 at 12:51 AM  

tbcd, உங்க சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP