சிதைவுகளின் நிழல்

>> Monday, December 14, 2009



ஒரே கத்தியில் இருந்துதான்
வெளிக்கிளம்புகின்றன
போருக்கான பறையும்
சமாதானத்துக்கான புறாவும்
சம்போகிக்கும்போது பிறப்பு நிச்சயமில்லை
பிறந்துவிட்டால் சாவு நிச்சயம்
சித்தர்மொழி போதையில் பீறிடுகிறது
இருவர் அமர்ந்து ஆடும் ஆட்டங்கள்
சுவாரசியமற்றவை- பெரும் களமும்
கூட்டமும் தேவைப்படுகிறது
வன்முறை வெறியாட்டத்திற்கு
இருப்பதில் எளிதானது
வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது
மற்றும் காதலிப்பது
பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது

(எழுதியது-2007ல்)

14 comments:

யாத்ரா December 14, 2009 at 7:28 AM  

\\பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது\\

என்ன சொல்றது நண்பா, இந்த வரிகளைப் படித்துவிட்டு,,,,,,,,,

MSK / Saravana December 14, 2009 at 12:43 PM  

Welcome Back Bro.. :)

MSK / Saravana December 14, 2009 at 12:45 PM  

சான்சே இல்லை.

இந்த கவிதையை நான் எழுதிருக்கணும்.. நீங்க எழுதீட்டீங்க.. :)

Ken December 14, 2009 at 9:41 PM  

kavithai nala iruku thala
old is gold

per mathinathukku karanam ethum ilaya :)

பூங்குன்றன்.வே December 14, 2009 at 11:03 PM  

/இருப்பதில் எளிதானது
வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது
மற்றும் காதலிப்பது
பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது//

நல்லா இருக்கு, எழுதியது என்றாலும் எப்போவும் ரசிக்கும்படி இருக்கு நண்பா.

ஜ்யோவ்ராம் சுந்தர் December 14, 2009 at 11:06 PM  

கவிதை நல்லாயிருக்கு.

chandru / RVC December 15, 2009 at 4:25 AM  

யாத்ரா, என்ன செய்ய நண்பா- வாழ்க்கை செலுத்தும் தடம்..?! :)

chandru / RVC December 15, 2009 at 4:25 AM  

சரா, அன்பிற்கு நன்றி :)

chandru / RVC December 15, 2009 at 4:27 AM  

கென்., said...
//per mathinathukku karanam ethum ilaya :)//
தல, உங்களுக்கு தெரியாததா?

chandru / RVC December 15, 2009 at 4:27 AM  

பூங்குன்றன், நன்றி

chandru / RVC December 15, 2009 at 4:28 AM  

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிதை நல்லாயிருக்கு.//
குருஜி, நன்றி!

தமிழ்நதி December 16, 2009 at 12:26 AM  

மிக யதார்த்தமான வரிகள். ஈழப்பிரச்சனைக்கு அப்படியே ஒத்துப்போகின்றன. 'சித்தர்மொழி'யில் இப்போது நிறையப் பேர் பேசக் கிளம்பியிருக்கிறார்கள். இருப்பதில் எளிதானதாக இருப்பது வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது என்பதிலிருக்கும் எள்ளலை ரசித்தேன். ஏனென்றால் அதில் நானும் இருக்கிறேன்.

உயிரோடை December 16, 2009 at 12:39 AM  

பெய‌ர் மாத்தின‌ ச‌டுக்கோடு ப‌ட‌ப‌ட‌ன்னு ப‌ழைய‌ க‌விதை எல்லாம் எடுத்து போடுங்க‌. ந‌ல்லா இருக்கு மேல‌ சொன்ன‌ க‌விதை.

chandru / RVC December 17, 2009 at 12:44 AM  

thamilnathi, lavanya - thanks!

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP