இங்கே ஒரு காதல் கதை - 2

>> Friday, April 16, 2010



3

‘இடுப்ப ஆட்டாத’

‘ஏய்... நேரா பாரு. பேலன்ஸ் பண்ணு’

‘’’ப்ச்ச், சொன்னா புரியாதா? நேரா பாரு’

‘சரிடா, திட்டாத’

‘பாவாடை ஒன்னுதான் குறச்சல். ஏத்திக்கட்டிக்கோ’

‘கெண்டக்கால் தெரிய ஏத்திக்கட்டிருக்கிறத ஆயா பாத்தா சூடு வச்சுடும்’

‘வைக்கும், வைக்கும்... வைக்கிறவரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நெனச்சியா?’

‘பின்ன, என்ன பண்ணுவியாம்?’

‘அதப்பண்றப்போ சொல்றேன். இப்போ நீ இடுப்ப ஆட்டாம, நேரா பார்த்து ஓட்டு’

‘ம்ம். நீயும் கொஞ்சம் சீட்டை மட்டும் பிடியேண்டா’

‘ஏன்? என்னாச்சு?’

‘இடுப்புல கை வச்சா கூச்சமா இருக்கு’

‘ஏன் அப்படி?’

‘போடா மக்கு... அது அப்டித்தான்’

4

‘இப்போ என்னடி? உனக்கு என்ன பிரச்சினை?’

‘கொஞ்சம் பாருடா... நான் பாவமில்லையா?’

‘இந்த உலகத்துல மனுசனா பிறந்த எல்லாருமே பாவந்தான்’

‘நான் என்ன கேக்குறேன்... நீ என்ன சொல்றடா? என்னய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேல்ல?’

‘அப்போ சொன்னேன். இல்லைனு சொல்லலையே. ஆனா சூழ்நிலை மாறிடுச்சு. நிறைய பிரச்சினை இருக்கு எனக்கு. இருக்குற வேலைய காப்பாத்திக்க முடியுமான்னு தெரியல. இதுக்கு நடுவுல தம்பி படிப்பு, அக்கா கல்யாணம் அது இதுன்னு’

‘புளிச்சுப்போன காரணம் சொல்ற. ஏன், என்னயக் காதலிக்கிறப்போ தெரியாதா? உனக்கு ஒரு அக்கா இருக்குறதும், தம்பி படிக்கணும்கிறதும்?’

‘நீ விதண்டவாதம் பேசிட்ருக்க. கெளம்பு. அப்புறமா பாக்கலாம்’

‘அப்புறமா என்ன பாக்கிறதுக்கு இருக்கு?, வேணாண்டா, தாங்கமாட்டேன். செத்துப் போயிருவேன்டா’

‘அதச் செய்யேன்டி முதல்ல. நானாவது நிம்மதியா இருப்பேன்’

5 comments:

Ken April 16, 2010 at 2:00 AM  

சாகிறதை எல்லாம் தெளிவா பேசுவாங்க ஆனா கொல்வாங்க ;)

sathishsangkavi.blogspot.com April 16, 2010 at 11:22 PM  

அழகான கவிதை, அழகான பகிர்வு...

chandru / RVC April 18, 2010 at 10:31 PM  

ken, sangavi - thanks ;)

அன்பேசிவம் April 19, 2010 at 9:03 PM  

யோவ், போய்யா.....
:-(

chandru / RVC April 22, 2010 at 10:19 PM  

முரளி - நன்றி! ;)

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP