இங்கே ஒரு காதல் கதை - 5

>> Thursday, April 22, 2010



பார்வை-1

9

நேற்றைய இரவில் என்றைக்குமான அழைப்பைவிட அவள் குரலில் மகிழ்ச்சி தளும்பியது.

‘ஹேய், கிளம்பி ரெடியா இரு, லெட்ஸ் கோ ஃபார் டான்ஸ்’

‘நானே உனக்கு கால் பண்ணலாம்னு நெனச்சேன்,போகலாம்’

ஒளிரும் நதியின் ஊடாக கைப்பிடித்து நடக்கத் தொடங்கி அதிரத்துவங்கிய இசையில் துடிக்கத் துடிக்க நடனமாடி வியர்த்திருந்தாள்.

இசை சற்றே ஓய்ந்த தருணத்தில் ‘ஒன் டகீலா, ஸ்ட்ரெய்ட் ஷாட்’ என்றவாறு அருகே வந்து அமர்ந்தவளிடம் ‘நேற்றும் கனவில் வந்து இம்சித்த நீலவண்ணச் சிறகு தேவதை நீதானா?’ என்றேன்.

தனிமையின் நீண்ட சுவடுகளை அடையாளமாய்க் கொண்ட என் அவல வாழ்வின் வெளிப்படுத்தலும், அன்பிற்கு ஏங்கும் உச்ச பரிதவிப்பிலுமாய் அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன். நெகிழ்வின் கைப்பற்றல்களை மென்மையாய் விடுவித்துக்கொண்டவள், பரிதாபமான பார்வையோடு சொன்னாள் ‘ப்ளீஸ்,குழப்பிக்காதடா!’


"மனதைப்பிளக்கும்
அரூப இசையுடன் நெடும்பயணத்தின்
மைல்கல்லில்
அமர்ந்திருக்கிறாள்
சிட்டுக்குருவிகள் பறந்துதிரியும்
இசைக்குறிப்புகளுக்கு சொந்தக்காரி"



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 4

>> Wednesday, April 21, 2010



7

‘இல்லடா,இது சரியா வரும்ணு தோணலை. விட்ரலாம்’

‘விட்ரலாம்னா... புரியல’

‘விட்ரலாம்னா... விட்ரலாம். அவ்வளவுதான்’

‘..............’

‘முறைக்காத. நிறைய பிரச்சினை வரும், ரெண்டு ஃபேமிலியும் அதிகமான இழப்பை சந்திக்கும்’

‘சும்மா அளக்காத. இத்தன நாள் இது உனக்கு தெரியாதா? உங்கப்பன் நல்லா அழகா, படிச்ச, வசதியான மாப்பிள்ளை பார்த்துருப்பான், அதான?’

‘எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத’

‘ஏய், நிறுத்துடி...நான் உனக்காக கொச்சின் இன்ஸ்டிட்யூட் M.tech சீட்டை வேணாம்னு சொன்னவன்’

‘நானா உன்னப் போக வேணாம்னு சொன்னேன்’

‘அன்னிக்கு நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலை? உன்ன ஒரு நாள் பாக்காட்டியும் செத்துருவேன்னு சொல்லலை?’

‘இல்ல, நான் அழலை... அப்படி சொல்லவும் இல்லை ’

‘ங்கோத்தா... பொய் சொல்றியே வெக்கமாயில்லை’

‘ஏய்ய்... மரியாதையா பேசு’

‘மூணு வருசம் காதலிச்சவன்கிட்டயே இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு கூலா சொல்ற... உனக்கென்னடி மரியாதை?’

‘லவ் பண்ணா? கல்யாணம் பண்ணிக்கன்னு சட்டம் சொல்லுதா?’

‘ஓ, சட்டத்தக் கேட்டுதான் மேடம் லவ் பண்ணீங்களா?’

‘என்ன பண்ணனும்கிற இப்போ?’

‘என்னைத் தவிர நீ யாரையும் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாது’

‘அத சொல்றதுக்கு நீ யாரு?’

‘என்னடி சொன்ன?’

‘இனிமேல், அடி புடின்ன... போலீஸ்ல ஈவ் டீசிங் கம்ளைண்ட் கொடுத்துருவேன்’

8

‘நான் அவன எப்டிலாம் லவ் பண்ணேன் தெரியுமா?’

‘புலம்புறத நிறுத்துறியா?’

‘இல்லடா, என்கிட்ட என்ன குறை கண்டான் அவன்... எப்படி இன்னொருத்திய..சே, நெனைக்கவே கஷ்டமா இருக்குடா’

‘ம்..ம்ம்..’

‘வாய் விட்டுக் கத்தி அழணும் போல இருக்குடா’

‘சரி, அழு’

‘உடனே என்னைய கோழைன்னு நெனைக்காத.... நான் அழுவுறனா?’

‘கண்ல இருந்து தண்ணி வந்தா அதை அப்படி சொல்றதுதான் வழக்கம்’

‘முடியலடா, அடக்க நெனைக்கிறேன், அடக்கிக்க முடியலை’

‘சரி...சரி.. இங்க பார்... என்னயப் பார்’

‘உன் தோள்ல சாஞ்சுக்குட்டா நீ என்னை தப்பா நெனப்பியா? சாஞ்சுக்குறேண்டா ப்ளீஸ்’

‘......’
‘.....’
‘ஏய்ய்ய்... ஏண்டா கன்னத்துல முத்தம் கொடுத்த?’

‘நீ அழறப்போ ரொம்ப அழகா இருக்க... அதான்’

‘அப்படியா?! அப்புறம் ஏண்டா அவன்... இன்னொருத்திய..?’

‘ப்ச், ப்ளீஸ்... வேணாமே’

‘ம், சரி. வேணாம்... நாம இப்படி கட்டிப்புடிச்சுட்டே இருந்துடலாமாடா?’

‘ம்... இருந்துடலாம்.’



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 3

>> Sunday, April 18, 2010



5

“மழையின் மீதான
பெருவிருப்புகளை
மீட்டெடுக்கிறது
இந்த காதல்
உன் கூந்தல் இழைபற்றி
பறந்து கருவானில் படரும் வேட்கை...”

‘ஏய் நிறுத்து..ஹோல்ட் ஆன்...ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் மேன்’
‘என்ன ஆச்சு?’
‘உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி கவிதைன்ற பேர்ல மொக்கை போட்ற?’
‘ஹூம், ஏன் பிடிக்கலையா?’
‘இந்த காதல் - இல்ல அது. க் விட்டுட்ட... ‘
‘புத்திசாலி பொண்ண லவ் பண்ணா இதான் பிரச்சினை’
‘கண்டிப்பா. லவ் பண்றதுன்னு முடிவெடுத்தப்பவே நீ முட்டாளாயிட்ட. அப்புறம் என்ன புதுசா கவலைப்படுற?’
‘உன்கிட்ட நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்’
‘நீ ஏன் என்கிட்ட இவ்ளோ சப்மிஸிவா போகணும். அடிமை மாதிரி இருக்காத, இயல்பா இரு’
‘அடிமைதான் - உன் அன்புக்கு’
‘இப்படி வசனம் பேசுறத நிறுத்தமாட்டியா? எல்லா முட்டாளும் அடிமையாகிறதில்லை... எல்லா அடிமையும் முட்டாளும் இல்லை’

‘ப்ளீஸ், இந்த வியாக்யானத்தை நிறுத்து’
‘சரி, நிறுத்திட்டேன். வா காதலிக்கலாம்’

6

‘ஏம்பா, இவ்ளோ குளிரா இருக்கு?’
‘ஏசி ஹோட்டல்னா அப்படித்தான் இருக்கும்’
‘நல்லாயிருக்குல்ல’
‘ம்.ம்ம்’
‘ஏம்பா ஒரு மாதிரி இருக்கீங்க?’
‘அதெல்லாம் ஒன்னுமில்லை. என்ன சாப்பிடுற சொல்லு’
‘நீயே சொல்லுப்பா’
‘நீதான இங்க வரணும்னு ஆசைப்பட்ட. நீயே சொல்லு’
‘கோவமா?’
‘அப்டிலாம் இல்ல. சீக்கிரம் ஆடர் கொடு’
‘ம், சரி’
‘எதுன்னாலும்100 ரூபாய்க்குள்ள முடியுற மாதிரி சொல்லு’
‘ம், சரி... என்ன எதுவுமே 45 ரூபாய்க்கு குறைச்சலா இல்ல?’
‘நீதானடி நேத்து குதிச்ச, இங்க திங்க வரணும்னு. இப்ப நொய் நொய்னு கேள்வி கேக்குற?’
‘இல்லப்பா. எனக்கு இவ்ளோ ஜாஸ்தியா இருக்கும்னு தெரியாது’
‘ஹும்ம்ம்...சரி விடு, எனக்கு எதும் வேணாம். நீ நல்லா சாப்பிடு’
‘இல்லப்பா, வாங்க போலாம். சாப்பிட்டா ரெண்டு பேரும் சாப்பிடணும். இல்லாட்டி வேணாம்.’
‘அடி லூசு, கோவிச்சுக்கிட்டியா?’
‘சே, அதெல்லாமில்ல.’
‘சரி, சாப்பிடலாம். ரெண்டு தோசை சொல்லவா?’
‘ம், சொல்லுங்க’
‘வெளில ஜாதிப்பூ விக்கிறாங்க பார். போறப்போ வாங்கிக்கலாம். ம்?’
‘ம், சரி. ரெண்டு முழம்’.



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 2

>> Friday, April 16, 2010



3

‘இடுப்ப ஆட்டாத’

‘ஏய்... நேரா பாரு. பேலன்ஸ் பண்ணு’

‘’’ப்ச்ச், சொன்னா புரியாதா? நேரா பாரு’

‘சரிடா, திட்டாத’

‘பாவாடை ஒன்னுதான் குறச்சல். ஏத்திக்கட்டிக்கோ’

‘கெண்டக்கால் தெரிய ஏத்திக்கட்டிருக்கிறத ஆயா பாத்தா சூடு வச்சுடும்’

‘வைக்கும், வைக்கும்... வைக்கிறவரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நெனச்சியா?’

‘பின்ன, என்ன பண்ணுவியாம்?’

‘அதப்பண்றப்போ சொல்றேன். இப்போ நீ இடுப்ப ஆட்டாம, நேரா பார்த்து ஓட்டு’

‘ம்ம். நீயும் கொஞ்சம் சீட்டை மட்டும் பிடியேண்டா’

‘ஏன்? என்னாச்சு?’

‘இடுப்புல கை வச்சா கூச்சமா இருக்கு’

‘ஏன் அப்படி?’

‘போடா மக்கு... அது அப்டித்தான்’

4

‘இப்போ என்னடி? உனக்கு என்ன பிரச்சினை?’

‘கொஞ்சம் பாருடா... நான் பாவமில்லையா?’

‘இந்த உலகத்துல மனுசனா பிறந்த எல்லாருமே பாவந்தான்’

‘நான் என்ன கேக்குறேன்... நீ என்ன சொல்றடா? என்னய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேல்ல?’

‘அப்போ சொன்னேன். இல்லைனு சொல்லலையே. ஆனா சூழ்நிலை மாறிடுச்சு. நிறைய பிரச்சினை இருக்கு எனக்கு. இருக்குற வேலைய காப்பாத்திக்க முடியுமான்னு தெரியல. இதுக்கு நடுவுல தம்பி படிப்பு, அக்கா கல்யாணம் அது இதுன்னு’

‘புளிச்சுப்போன காரணம் சொல்ற. ஏன், என்னயக் காதலிக்கிறப்போ தெரியாதா? உனக்கு ஒரு அக்கா இருக்குறதும், தம்பி படிக்கணும்கிறதும்?’

‘நீ விதண்டவாதம் பேசிட்ருக்க. கெளம்பு. அப்புறமா பாக்கலாம்’

‘அப்புறமா என்ன பாக்கிறதுக்கு இருக்கு?, வேணாண்டா, தாங்கமாட்டேன். செத்துப் போயிருவேன்டா’

‘அதச் செய்யேன்டி முதல்ல. நானாவது நிம்மதியா இருப்பேன்’



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 1

>> Thursday, April 15, 2010



1

'போகாத, நில்லு'

'எதுக்கு?'

'நான் உன்ன அளவுக்கு அதிகமா காதலிக்கிறேன், புரிஞ்சுக்க'

'அது என்ன, காதல்ல அளவு அதிகமான காதல், குறைவான காதல்னுலாம் இருக்கா என்ன? டேய், காதலிச்சா முழுசா காதலிக்கணும். வெறுத்தாலும் முழுசா வெறுக்கணும். மனசுக்குள்ள கட்டம் போட்டு வச்சுக்கிட்டு போலியா வாழ முடியாது. நீ இன்னும் மெச்சூர் ஆகல. டயலாக் விடாம போய்டு'

'இல்ல, நீ இல்லாட்டி செத்துருவேன்'

'செத்துடு'.

2

'என்னடா, அப்படி பாக்குற?'

'இல்ல, சேலை கட்டிருக்கப்ப இவ்வளவு அழகா இருக்கியே, சேலை கட்டாம..'

'ச்சீய், எப்போ பாரு.. உனக்கு இந்தப் பேச்சுதானா?'

'இல்லம்மா, சேலை கட்டாம-சுரிதார்ல எப்படி இருப்பன்னு சொல்ல வந்தேன்'

'பொறுக்கி, உன்ன எனக்குத் தெரியாது. என்ன பக்கத்துல வச்சுக்கிட்டே ஒருத்திய விடமாட்டே'

'அழகெல்லாம் ரசிக்கப்படணும் கண்ணம்மா'

'ஓ! என்னய யாராவது ரசிச்சா?'

'சே! என் அளவுக்கு மத்தவங்க ரசனையும் மோசமா இருக்காதுன்னு நம்புறேன்...'

'ராஸ்கல்... உன்ன...என்ன பண்றேன் பாரு'

'ஏய், நெஞ்சுல குத்தாதடி... மாரடைச்சு செத்துட கித்திடப் போறேன்'

'செத்துடு'.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP